பாரதத்தின் புகழ் பெற்ற பழம் பெரும் பண்பாடு என்ற பெயரில் ஒற்றைப் பண்பாட்டுச் சிந்தனையைத் திணிக்கும் விதத்தில் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். என்னும் பாசிச அமைப்பின் இரகசிய அறைகளுக்குள் உண்மை என்னும் ஒளியைப் பாய்ச்சி, அந்த அமைப்பின் கொடூரமான பாசிசச் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் ஒரு ஒப்புதல் வாக்குமூலமே இப்புத்தகம். மலையாளத்தில் சுமார் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகிச் சாதனை படைத்துள்ளது என்பதோடு. தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டும் வருகிறது. ஆங்கிலம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
- சுதீஷ் மின்னி
ஆர்.எஸ்.எஸ்-ன் ஒட்டுமொத்த சுயரூபத்தையும் இந்த புத்தகம் படம் பிடித்துக் காட்டுகிறது. இம்மண்ணில் வாழும் மக்களின் ஒற்றுமையைக் சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்டு வரும் வகுப்புவாத சக்தியான ஆர்.எஸ்.எஸ். மனிதாபிமானம் நொறுங்கிப் போகும் விதத்தில், கொடூரமான மற்றும் மிருகத்தனமான வழிகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்புத்தகம் சித்தரிக்கிறது.
- தோழர் பிணராயி விஜயன்
கேரள முதல்வர்