விசித்திரமாக இருக்கிறது. இந்தியாவின் தந்தையை ஏன் ஒரு இந்தியன் கொல்ல வேண்டும்.
அது தான் எங்களுக்கும் புரியவில்லை என்றார் கித்வானி..
'பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டார்.''
அவரைச் சுட்டுக் கொன்றவன் கூட அவரைக் கைகூப்பி வணங்கியபிறகே தனது துப்பாக்கியை உயர்த்தினான்
கொலைகாரன் ஏன் அவரை வணங்கினான் எனக் குழப்பமான முகத்துடன் கேட்டான் ஒபாடே.
அவனுக்கும் அவர் தந்தை தானே என்று தணிவான குரலில் சொன்னார் சுக்லா.
காந்தியைச் சுமப்பவர்கள்