ஆய்வாளர் முனைவர் வெ. பிரகாஷ் எழுதியுள்ள இந்த நூல் அளவில் சிறிது; இரு கட்டுரைகளையும் முடிவுரையையும் மட்டுமே கொண்டுள்ளது. ஆயினும்,இந்தச் சிறிய நூலில் சங்க இலக்கியச் செய்யுட்களின் திணை வகைப்பாகுபாட்டிற்கு அவர் அளித்திருக்கும் தெளிவு பெரிது. தொல்காப்பியம் திணைப் பாகுபாடு குறித்துக் கூறும் நூற்பாக்களின் உள்நுழைந்து, துருவித் தேடி முறைப்படுத்தி அவர் தந்திருக்கும் விளக்கம் தொல்காப்பிய வழி சங்க இலக்கியங்களை அணுகுவோர்க்கு மகிழ்ச்சி தரும்.