பழமொழிகள் ஒரு சமூகத்தின் பண்பாட்டை விளக்குவதாகவும், பண்பட்டு வாழ்ந்த வாழ்க்கையின் சாரமாகவும் விளங்குவன பழமொழிகளே. இப்பழமொழிகளைக் கொண்டே மொழியின் வளத்தை, மக்களின் பண்பாட்டை, வாழ்க்கை நடைமுறைகளை அறிய முடியும். இதில் நம் முன்னோர்கள் முன்னிலை வகித்தனர் என்றால் அது மிகயாகாது. நம் முன்னோர்கள் ஆக்கிச் சென்ற செய்யுள் நூல்களிலும், பிற்காலப் புலவர்கள் ஆக்கிச் சென்ற செய்யுள் நூல்களிலும், பிற்காலப் புலவர்கள் ஆக்கிச் உரைநடை நூல்களிலும் எண்ணற்ற பழமொழிகள் அழகுமிளிர அமைந்துள்ளன.