குஜராத் மாநிலத்தில் கிர் காட்டில் உள்ள சிங்கம் ஒன்று புல்லை உண்ணும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. அத்துடன் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமே நடந்து வருகிறது.
புலி, சிங்கம் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஆடு, மாடு, முதல் மனிதன் வரை அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். இதில் புலியோ எப்போது உணவு கிடைத்தாலும் அப்போது அடித்து தின்னும்.
ஆனால் சிங்கமோ பசிக்கும்போது மட்டுமே உணவு உண்ணும். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது பழமொழி. ஆனால் இங்கு ஒரு சிங்கமே புல்லை தின்னும் வீடியோ வைரலாகியுள்ளது.