திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் முதல் காவல் தலைவராய் விளங்குபவர் நந்தியெம்பெருமான. இவரே சிவபெருமானிடமிருந்து சித்துகள் பலவற்றை அறிந்தவர். இவர் சித்தர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். நந்தீசர் நிகண்டு என்னும் நூலில் கட்டுகள் பற்றிய பல அரிய செய்திகளைக் கூறுகிறார். பாஷாணக்கட்டு, சாரக்கட்டு, ரசக்கட்டு, லிங்கக் கட்டு பற்றி விவரிக்கிறார். முப்பு பற்றியும் பல குறிப்புகளை அளித்துள்ளார்.