உயர்நிலையை அடைந்த ஞானிகளும் சித்தர்களும் மகான்களும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த ஆசையின் விளைவாக அவர்கள் நமது நிலைக்கு இறங்கி வந்து அவர்கள் கடைபிடித்த வழிமுறைகளை பாடல்களாக, இலக்கியங்களாக எழுதி வைத்துச் சென்றனர். சித்தர்கள் சொன்ன வழிகளை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகத் தருவதே இந்த நூலின் நோக்கம்.