சூஃபி மகான் அபுல்ஹசன் தன் வீட்டில் அமர்ந்திருந்தார். படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்பறத்தான் நேரே அவரிடம் வந்து 'என்னுடைய கழுதை காணாமல் போய்விட்டது. அதை நீங்கள்தான் திருடினீர்கள் என்று எனக்குத் தெரியும். என் கழுதையை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்' என்கு கூறி நின்றான்.