கனிவமுதன் எனும் ஆட்டிச நிலைச் சிறுவனின் இது வரையிலான வளர்ச்சிப் பாதையை அவனது அன்னையின் பார்வையில் விவரிக்கும் நூல் இது. ஒரு வகையில் இது ஒரு தன்வரலாற்று நூல். அறிவுசார் குறைபாடுகளை சகஜமாக ஏற்றுக் கொள்ளத் தயங்கும் சமூகத்தில் ஒரு குழந்தையும், அதன் பெற்றோரும் எதிர்கொள்ளும் சவால்களைப் பேசும் நூல் இது. அதே நேரம் அவ்வாழ்கையின் மகிழ்வுத் தருணங்களையும் தன்னுள்ளே கொண்ட, நேர்மறையான நம்பிக்கையூட்டும் நூலும் கூட