ஒருவர் ஏதாவது அட்வைஸ் பண்ணினாலோ அல்லது வாழ்வு முறைகளைச் செம்மையாக அமைத்துக் கொள்ளச் சொன்னாலோ இவன் என்னடா! ஏதோ வேதாந்தம் பேசுகிறான் என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். எல்லாரும் அவரவர் வாழ்க்கையில் தினமும் கடைப்பிடிக்கும் பல விஷயங்களில் வேதாந்த ரகஸியங்கள் அடங்கியுள்ளன. ஆனால் நமக்குத்தான் அவற்றை புரிந்து கொள்ள முடிவதில்லை. வேதம் என்பது முழு நூலுக்குப் பெயர். வேதாந்தம் என்பது அதன் இறுதிப்பகுதிக்குப் பெயர். வேதம் கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. ஞான காண்டமே வேதாந்தமாகிய உபநிஷத்துக்கள்.