நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்துக்கான வியத்தகு வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் ஊர் நாகூர். காரணம் நாகூர் தர்கா. நாகூர் நாயகம் நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கும் அற்புதங்கள் ஒரு தொடர் காவியம். இறைவனில் ஒன்றி தன்னை இழந்தவர்களுக்கு மரணம் என்பது உடலின் மறைவு மட்டுமே என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது நாகூர் நாயகத்தின் வரலாறு. ஜாதி மத வேற்றுமையின்றி நம்பிக் கேட்பவர்களுக்கெல்லாம் நாகூர் நாயகத்தின் அற்புத ஆற்றல் அருள்பாலித்துக் கொண்டுள்ளது. நாகூரார் இல்லையேல் நாகூர் இல்லை. நாகூராரின் அற்புத வரலாற்றை நாகூர் ரூமி எழுதும்போது அந்த அற்புதத்தின் சுவை எழுத்திலும் ஒட்டிக்கொண்டுவிடுகிறது.