இன்றைய தலைமறையின் உக்கிரமான கவிகளில் ஒருவர் கணேசகுமாரன். வேர்களற்ற இருப்பின் கசப்பும் சுயஎள்ளலும் அபத்தங்களின்மீதான பெரு நகையும் கொண்டவை இந்தக் கவிதைகள். வாழுதலின் பெரும் பதட்டங்களும் உறவுகளின் வேர்களற்ற நிம்மதியின்மைகளும் கானகத்தில் எரியும் நெருப்பைப் போல இந்தத் தொகுப்பு முழுக்க எரியச் செய்கின்றன.கத்திமுனையின் கூர்மைகொண்ட படிமங்களின் வழியே இந்தக் கவிதைகள் மனிதன் ரகசிய திரைகளைக் கிழிக்க முற்படுகின்றன.