இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனம் தொடர்பாகவும், மனச்சோர்வு தொடர்பாகவும் சில புரிதல்களை ஏற்படுத்துவதும், அது சார்ந்த சில கதவுகளைத் திறந்துவிடுவதும்தான் நோக்கமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொகுப்பு மனச்சோர்வு தொடர்பான ஒரு எளிமையான புரிதலை நிச்சயம் ஏற்படுத்தும். மனம் பற்றியும், மனநலம் பற்றியும், மனநோய்கள் பற்றியும் இங்கு எழுதப்படும் எந்த ஒரு எழுத்தும் அந்த எழுத்தாளனின் தனிப்பட்ட கருத்தை மையப்படுத்தியே இருக்கும். ஆனால் இந்த நூல் அறிவியல் தளத்தில் நின்று அதன் அசலான உண்மைகளை பேசுகிறது.