நெருப்பு சுடும் என்பதைத் தொட்டறிந்து , பட்டறிந்தவர்களும் உண்டு, அப்படிப் பட்டறிந்தவர்களைப் பார்த்தறிந்தவர்களும் உண்டு. எல்லாவற்றையும் நாமே நேரடி அனுபவம் பெற்றுத்தான் அறிந்துகொள்ளவேண்டுமெனில், அதற்கு ஓராயிரம் ஆயுள் அமைந்தாலும் போதாது. 'ஆனால், வாழ்ந்து மறைந்தவர்களின் , 'வாழ்க்கை அனுபவங்களிலிருந்து. ஓராயிரம் அறிவினை ஒட்டுமொத்தமாகப் பெற்று, 'இந்த ஓர் ஆயுளை உன்னதமாக்கிக் கொள்ள முடியும். அத்தகைய அனுபவங்களைச் சரித்திர சாளரத்தின் வழியாகப் பார்த்து, பதமாக்கிப் பாடமாக்கித் தந்திருக்கிறார் இந்த நூலில் தேவகோட்டை பஞ்சநதம், நம் வாழ்வில் வரவு வைத்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கைச் சிந்தனைகளை. வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறி வடித்துத் தந்திருக்கிறார்.