இராமலிங்க
அடிகள் முதலில், தம் தமையனாரிடத்தும், பின்னர் காஞ்சிபுரம் சபாபதி
முதலியாரிடத்தும் கல்வி பயின்றார். இளம்பருவத்திலேயே இவர் முருகக்கடவுளை
மனமொழி மெய்யொன்ற வழிபட்டுப் புகழ்ப்பாக்கள் தொடுக்கலாயினார். இவர்
அடிக்கடி திருவொற்றியூர்க் கோவிலுக்கும் சென்னைக் கந்தசாமி கோவிலுக்கும்
போய்த் திருவருளைச் சிந்தித்து வருவார். இவர் முதற்கண் எழுதியது மாணவர்க்கு
மாண்புடை உரைநடை கற்பிக்கும் உயர் நூலாய 'மனுமுறை கண்ட வாசகம்' என்பது.
இதன்பின் பல நூல்களை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்தருளியதோடு அரிய பல
விரிவுரைகளும் ஆங்காங்கு நிகழ்த்தினார்.