மயிலன் ஜி சின்னப்பனின் ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான
சித்திரத்தை வரைந்து காட்டுகிறது.
ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக, சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். அவரும் அதற்குள் அங்கமாக இருப்பவர் என்பதால் அந்த விவரிப்புகளுக்கு இயல்பாகவே ஒரு உண்மைத் தனமை கிடைத்துவிடுகிறது.