தமிழ்த்திரைப்படச் சூழலில் திரைப்பட அவதானிப்பை கல்விக்கூடங்களில் பாடமாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த எங்கள் குருநாதர் பாலு மகேந்திராவின் மாணவர்களில் ஒருவரும் என்னுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள மருதன் பசுபதி எழுதியிருக்கும் 'காலமற்ற வெளி' என்னும் இத்தொகுப்பு முக்கியமானது.
இதனைத் தொடர்ந்து பசுபதி சிறந்த திரைப்படங்களை உருவாக்குபவராக வளர என் வாழ்த்துகள்.
மருதன் பசுபதி அவர்களின் பரந்து பட்ட வாசிப்பும் உலகத் திரைப்படங்களினூடே உளவியல் பூர்வமான பயணமும் இப்புத்தகத்தை வாசகனுக்கு நெருக்கமாக்குகின்றன. இந்தியத் திரைப்படங்களும் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களே என்னும் புரிதலை வாசகனுக்கு இந்தப் புத்தகம் புரியவைக்கும். காலமற்ற வெளி சினிமாவைப் புரியவைக்கும் மொழி.