யார் யார் எந்தக் கோலத்தில் காண வேண்டி வழிபாடு ஜபதபாதிகள் நடத்துகிறார்களோ - அவர்களுக்கு அந்தந்த் முறைப்படி அருள் புரியத் தயங்குவதில்லை. அத்தகைய சிறந்த எட்டு வகை லக்ஷ்மியருள் - எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நிலையில் எல்லோருக்கும் மங்களகரமான ஸகல காரியங்களையும் ஸித்தி பெறச் செய்து வருபவள் ஸர்வமங்களா என்னும் ஸ்ரீ ஸெளபாக்ய லக்ஷ்மி இத்தேவியை வணங்கி வழிபட்டுத் தினமும் ஸ்தோத்ராதிகளைச் சொல்லித் த்யானித்து வந்தால் நமக்கு அருள் கூர்ந்து பலவகை மங்கள நலன்களையும் நல்கி நம்மைக் காப்பாள் என்கிறது ஸ்ரீ லக்ஷ்மீ தந்திரம் என்னும் நூல்.