மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுவதே தன் வாழ்நாள் பணி என்ற கொள்கையுடைவரும் தொண்டர்களை எப்போத்மு மதிக்கின்ற தலைவராயும் விளங்கிய அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் கீதானந்தன் அவர்கள் அண்ணாவின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாகத்திறன் போன்றவற்றைச் சுவைபடத் தனக்கே உரிய எழுத்தாற்றால் நயமாகக் குறிப்பிட்டுள்ளார். நம் நாட்டு, அயல்நாட்டுக் கவிஞர்கள், புரட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள், இந்திய அரசியல் சட்டம், பொருளாதார மண்டலம், நந்திகிராமம், திபெத் பிரச்சினை போன்ற பொருள்களைக் குறித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.