அதிகாலை நேரத்தில் மிதமான சில்லென்ற காற்று வீசும் திசைக்கேற்ப வீட்டை சுற்றி இருந்த மரங்களும் செடி கொடிகளும் நர்த்தனம் ஆடி தங்களின் சுகந்தத்தை சுற்றியுள்ள இடங்களுள் வாசனைகளாய் பரப்பிக் கொண்டிருந்தன. லேசான தூறல் தென்றலுடன் தேகத்தை தீண்ட சிலிர்த்து அடங்கினான் பிரசாத். உடலை தீண்டிய அதன் குளுமை ஏனோ அவனின் மனதை தீண்டவே இல்லை.