எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனின் எழுதிய மாநகர பயங்கரவாதி, கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள், மறைந்த கலைஞர் கருணாநிதி குறித்து எழுதிய "எழுந்து வா தலைவா" ஆகிய 3 கவிதை நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள் புத்தகத்தை திருச்சி சிவா வெளியிட எழுத்தாளர் இசை பெற்றுக்கொண்டார். மாநகர பயங்கரவாதி என்ற புத்தகத்தை இயக்குனர் ரோஹினியும், எழுந்து வா தலைவா என்ற புத்தகத்தை முனைவர் சூரியன் பாலும் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் எழுத்தாளர் இசை, எழுத்தாளர் கவின் மலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.