நாட்டு நடப்பு பற்றி மனதைத் தொடும் வண்ணம் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதில் புகழ்பெற்று விளங்கும் மனுஷ்யபுத்திரன் எழுதியு புத்தகம் இது. காவு கேட்கும் சாதி அரக்கன், கமலை எதிர்ப்பது நியாயமா?, நீதியை அழிக்கும் சட்டங்கள், ராஜபக்சே நடத்தும் உளவியல் யுத்தம், வினேதிகளுக்கு விடிவு உண்டா?, மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் இத்தகைய தலைப்புகளில் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகள். நடுநிலையில் இருந்து பிரச்சினைகளை அலசுகிறார் மனுஷ்யபுத்திரன். இதனால் பிரச்சினைகளை சரியாக அறிந்துகொள்ளவும், நாடு போகிற போக்கை உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. சரளமான நடை ஒரு பிளஸ் பாயிண்ட். முக்கிய பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 31/7/13.