பல சந்நியாசிகள் நிர்வாணமாக ஊர்வலம் போவது நமது மதத்தை பற்றி மற்றவர்கள் கேவலமாக கருதமாட்டார்களா? என்று பலர் நினைத்து வறுத்த படுகிறார்கள்
உடம்பில் துளி கூட துணியில்லாமல் இருப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் ஆடையோடு இருப்பதை விட அம்மணமாக இருப்பதில் தான் மகா சிரமம் இருக்கிறது.
மழை, குளிரை அம்மணம் தாங்காது என்பது வேறு விஷயம். ஆடை அணிகின்ற போது நமக்குள் அந்தரங்கமாக ஏற்படும் உணர்வுகளை மறைத்து கொள்ளலாம்.
ஆடையில்லாத நிலையில் உணர்ச்சிகளை மறைப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. அவ்வளவு சுலபமாக எல்லோராலும் நிர்வாணமாகயிருக்க இயலாது.
ஒரு குழந்தை நிர்வாணமாகயிருப்பது பற்றி வெட்கப்படுவதில்லை.
அது எப்பொழுது மற்றவர்களை பார்த்து தனது நிர்வாணத்தை மறைக்க துவங்குகிறதோ அப்போதே அதன் மனதில் கள்ளம் கபடம் உருவாக துவங்கி விட்டது என பல மனோ தத்துவ நூல்கள் சொல்கின்றன.
ஒரு சராசரி மனிதன் அம்மணமாக இருக்கிறான் என்றால் ஒன்று அவன் மனம் பேதலித்த நிலையில் இருக்க வேண்டும் அல்லது ஆண், பெண் பேதத்தை அழித்தவனாக இருக்க வேண்டும்.