தமிழ்நாட்டில் தமிழனுக்கு தன்னைவிட தனது தமிழ் பற்றே தலைசிறந்தது என்று கூறினால் அது மிகையாகாது. ஏனெனில் தமிழனுக்கு தமிழ் அவனது நாடி நரம்புகளில் ஓடும் இரத்தத்தில் ஊறியுள்ளது. பிறப்பால் தமிழன், வளர்ப்பில் தமிழன், நடப்பில் தமிழன், சிந்தனையில் தமிழன், சிரிப்பில் தமிழன், செவிக்கும் தமிழன், உரைப்பிலும் தமிழன், தாய்நாட்டுக்கு தமிழன், என்பது குறிப்பிடத்தக்கது . தமிழ் என்றதும் பாரதி என்பவன் நமது நினைவுக்கு வருவது ஒரு தமிழனுக்கு, மகன் என்றவுடன் தாய் என்பது இயற்கையாகவே மனதில் தோன்றுவதைப்போல.