யுகபாரதி,
பிரேம்குமார் பரமசிவம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர், 1976இல் தஞ்சையில்
பிறந்த இவர் மனப்பத்தாயம் கவிதைத் தொகுப்பு மூலம் எழுத்துலகிற்கு
அறிமுகமானவர், முதல் கவிதைத் தொகுப்பே தமிழக அரசு பரிசு பெற்றதைத்
தொடர்ந்து பஞ்சாரம், நொண்டிக்காவடி, தெப்பக்கட்டை, தெருவாசகம், ஒரு
மரத்துக் கள் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும்; ஒன்று, கண்ணாடி முன், அதாவது,
நேற்றைய காற்று, நடுக்கடல் தனிக்கப்பல், வீட்டுக்கு வெளியே வெவ்வேறு
சுவர்கள், நானொருவன் மட்டிலும் ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்
வெளியிட்டிருக்கிறார். நேர்நிரை என்னும் பதிப்பகத்தின் வாயிலாக
நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்.