இன்றைய இளைய தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்த ஒருவர். தமிழ்ச் சிறுகதைகளில் இதுவரை யாரும் பயன்படுத்தாத புதிய, அழகான மொழி நடைக்குச் சொந்தக்காரர். அதுதான் இவருடைய பலம். மிக மென்மையான முறையில் மனிதர்களின் ஆழ்மன சிக்கல்களை அணுகும் இவருடைய கதைப்போக்கு தமிழுக்கு முற்றிலும் புதிய வரவு. "இந்தியா டுடே" அறிமுக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்று, தமிழ் எழுத்துலகில் நுழைந்தவர். "கன்னிவாடி", "ஆதிமங்கலத்து விசேஷங்கள்" ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.