தற்கால சூழலுக்கேற்ப மாணவர்களின் அன்றாட வாழ்வின் வழிகாட்டியாக பரிணமிக்க வேண்டியது அவசியமாகிறது. நம் பழமையான நூல்களின் மையக் கருத்துகளும், சில பொருண்மைகளும் அவ்வப்போது சிறுசிறு நூல்களாக வெளிவருகின்றன. இது வரவேற்கத்தக்க பணியாகும். இப்படிப்பட்ட சிறு நூல்களில் ந.செல்வம் அவர்களால் எழுதப்பட்ட வரிசையில் "மனமே ஒரு மகாசக்தி" என்னும் நூல் வெளிவருவது மனநிறைவளிக்கும் நிகழ்வாகும்.
வெற்றி பற்றிய சிந்தனை துவண்ட மனமுடைய மாணவர்களுக்கு உண்மையில் ஒரு வெற்றி வழிகாட்டி எனலாம். நல்ல பழக்க வழக்கங்கள் எவ்வாறு நடத்தையாக மாறுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டும் பிற எடுத்துக்காட்டுகளும் வாசிப்பவர்களின் சூழலோடு ஒட்டி நிற்கிறது. கடைசியாக, இந்நூலில் திரு.ந.செல்வம் அவர்கள் மன அழுத்தத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வது எவ்வாறு என்பதற்கான வழிமுறைகளை வழங்கி மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்.
முனைவர் க.பாஸ்கரன்