நூலாசிரியர், கயிலை. புலவர். சீ. சந்திரசேகரன், திருப்பனந்தாள் செந்தமிழ்க்
கல்லூரியில் பயின்று, கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு
பெற்றவர். சித்தர்கள், மகான்கள் மீது கொண்ட பிடிப்பால் கடந்த பல
ஆண்டுகளாகப் பொதிகை மலைசதுரகிரி மலை அண்ணாமலை, இமயமலை இன்னும்பல
இடங்களுக்கும் சென்று வருபவர், சித்தர்கள் மகான்கள் அடங்கிய இடங்களுக்குச்
சென்று வழிபடுவதைப் பெருவிருப்பமாகக் கொண்டவர்.
இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று வழிபட்டவர். சித்தர்
சமாதிபீடங்களை தரிசிப்பதையும், அவை இருக்குமிடங்களை நூல் வாயிலாக
வெளிப்படுத்துவதையும், சித்தர்கள் தமக்கு அளித்தப் பெரும்
பேறாகக்கருதுகிறார் .
அவரது படைப்பாக சித்தர் தரிசனம், சித்தர்பீடங்கள் 200, சித்தரைத் தேடி
ஆகிய மூன்று நூல்களை எங்களது விஜயா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு
இருக்கிறோம். தற்போழுது அவரது ஆன்மீகத் தேடலின் அனுபவங்களை "சித்தன் அருள் "
எனும் தலைப்பில் நூலாக வெளியிடுகிறோம். ஆன்மீகத் தேடல் உள்ள அன்பர்களுக்கு
இந்நூல் ஊக்கம் தருவதாக அமையும் என நம்புகிறோம்.