பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப்
பழகியதால் ஏற்பட்ட அனுபவம், நெருக்கம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ள
நுால். ஜெயகாந்தனின் அரசியல், சமூக, ஆன்மிகப் பார்வையை ஆழமாய் அலசுவதோடு
திறனாய்வாய் முன்வைக்கிறது. ஜெயகாந்தனின் கதை உலகம், விமர்சனங்கள்,
பாத்திரங்கள், அக்காலத்தில் படைப்புகள் சார்ந்த ஒப்பு நோக்கு என நீள்கிறது.
ஜெயகாந்தனின்
படைப்பை வாசித்தோருக்கு புது அனுபவத்தையும், சுதந்திர வெளியையும் திறந்து
விடுகிறது. புதிய வாசகர்களுக்கு ஜெயகாந்தன் மீதான தேடலை அதிகரிக்க வைக்கும்
நுால்.