கியூபா புரட்சிகர யுத்தத்தின் கதை; இந்நூலில் சேகுவேராவின் புரட்சிகர உணர்வின் முழுவீச்சையும்,உயர்ந்தலட்சியத்திற்கான பயணத்தின் புதிய அபாயங்கள், சவால்கள் ஆ கியவற்றை அவரது அமைதி அடையாத உள்ளமு எவ்வளவு சாதாரணமாக வரவேற்றது என்பதையும் உணர முடிகிறது. 'நமது போர்க்குரலை இன்னொருவர்செவிமடுப்பார் என்றால்,நமது ஆயுதங்களை எடுத்துக்கொள்வதற்கு இன்னொருவர் கைநீட்டுவார் என்றால் ,நமது இறுதி ஊர்வலத்தின் சோக கீதத்தை இயந்திரத்துப்பாக்கியின் ஓசையினாலும், புதிய யுத்தம், புதிய வெற்றியின் ஓசையினாலும் இசையமைத்துப்பாட மற்றவர்கள் முன் வருவார்கள் என்றால் எங்கு வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டுமானலும் மரணம் நம்மைத்திடீர் என்று தழுவட்டும். நாம் அதை வரவேற்போம் என்று தனது கல்லறை வரிகளை எழுதினார் .கொடுங்கோன்மையையும் ஒடுக்குமுறையும் எதிர்த்து மக்கள் போராடிய தேசம் ஒவ்வொன்றையுமே தனது தேசமாக வரித்துக்கொண்ட சேகுவேரா ராணுவக் கொடுங்கோலர்களால் 39ஆம் வயதில் கொலை செய்யப்பட்டார். கியூபா புரட்சிகர யுத்தத்தைக் கதையாக இந்நூல் கூறுகிறது.
- பதிப்பகத்தார்.