போற்றத்தக்க ஆளுமைகளைப் பற்றிய பல்வேறு தகவல்களைக் கொண்ட காத்திரமான கட்டுரைகளடங்கிய தொகுப்பு நூல். கார்ல்மார்க்ஸ், ஷேக்ஸ்பியர். ஷெல்லி, வோர்ட்ஸ்வொர்த் என உலகளாவிய பெருமை மிக்கப் படைப்பாளிகளைப் பற்றிய கட்டுரைகளும், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய தேசத்து பிரபலங்களைப் பற்றிய புதிய பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகளும் இந்நூலுக்கு அணி செய்கின்றன. வ.உ.சி, பாரதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், மு.வ.ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் குறித்த சிறப்புகளைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.