உதயசங்கரின் பன்னிரெண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கண்ணாடிச் சுவர்கள். இவை அவரது தொடர்ந்த சோதனை முயற்சிகளின் நீட்சியாக வெளிவந்தவை. அவரது நீண்ட சாதனை இப்புள்ளியில் வெற்றி அடைந்துள்ளதாகவும் அறுதியிட்டுக் கூற முடியும். ஒருவகையான பழகிப்போன யதார்த்தவாதப் புனைவுகளில் இருந்து கதை சொல்லியை விடுவித்து கட்டற்ற சொல்லாடலில் கதைத் தளத்தை விரித்துச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டும் வந்திருக்கிறார்.