தோன்றியவையே இடப்பெயர்கள். "பெயர்களை ஒருவகையில் புதைபொருட்களுக்கு ஒப்பானவை என்றும் கூறலாம். புதைபொருட்களைப் போலவே பெயர்களும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வந்திருக்கின்றன. ஆகையால் புதைபொருட்களைப் போலவே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பற்றிக் கூறும் தன்மையன பெயர்கள்" (மேற்கோள், கல்வெட்டில் ஊர்ப்யெர்கள், ஆளவந்தான், பக்.) என்ற கருத்தை எண்ணிப் பார்க்கும்போது கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் பெயர்களை ஆய்வு செய்தல் தேவையாகிவிடுகின்றது. இங்கு ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றிருக்கும் ஊர்ப்பெயர்களைப் பற்றி மட்டும் ஆராய முற்படுகிறேன்.