மார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 1847ஆம் ஆண்டு "நீதியாளர் கழகம்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் – ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களைத் தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்க்சும் – ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, நீதியாளர் கழகமாக இருந்த இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் அகிலம்” என்று மாற்றினர். 1864 செம்படம்பர் 28 இல் லண்டனில் சில நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள், மற்றும் சனநாயக இயக்கங்களின் கூட்டத்தில் அகிலம் நிறுவப்பட்டது. அக்கூட்டத்தில் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் நிறுவுவது என முடிவும் செய்யப்பட்டது. புதிய அமைப்பின் விதிமுறைகள் அமைக்கும் பொறுப்பு கார்ல் மார்க்சுக்கு அளிக்கப்பட்டதுமார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்சு, செருமனி மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்நிலையில் 1847ஆம் ஆண்டு "நீதியாளர் கழகம்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் – ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களைத் தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்க்சும் – ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, நீதியாளர் கழகமாக இருந்த இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் அகிலம்” என்று மாற்றினர். 1864 செம்படம்பர் 28 இல் லண்டனில் சில நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் சங்கங்கள், மற்றும் சனநாயக இயக்கங்களின் கூட்டத்தில் அகிலம் நிறுவப்பட்டது. அக்கூட்டத்தில் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் நிறுவுவது என முடிவும் செய்யப்பட்டது. புதிய அமைப்பின் விதிமுறைகள் அமைக்கும் பொறுப்பு கார்ல் மார்க்சுக்கு அளிக்கப்பட்டது