மும்பை சேரிகள் துவங்கி, பீஹார் சுரங்கங்கள் வரை, காஷ்மீர் பனிமலை துவங்கி பெங்களூர் மின்னியல் பூரிக்கள் வரை முதலாளித்துவம் தனக்கான புதை குழியைத் தோண்டிக் கொண்டுள்ளது. முதலாளித்துவ எதிரிகள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே உள்ளது. அவர்களே எதிர்காலக் கம்யூனிசத்தின் சிற்பிகள். அதுவே இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை. இச்சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை இன்றும் பயன்பாட்டுக்குரியதாக; வழிகாட்டுதல் தருவதாக உள்ளது. அதை நமது தேவைக்கேற்ப மறுவாசிப்பு செய்து, பொருள் கொள்ளவும், வழிகாணவும் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை.