நம்மை கவரும். அவற்றில்தான் 'கபீர் சொல்கிறான்' என்ற பிரயோகமும் மிகுதியாக இருக்கும். இந்த இரு வார்த்தைகளை மிக இயல்பாகத் தன் பாடல்களில் அமைத்துப் பாடும்போது, கவிதையிலிருந்து வாசகனை அந்நியப்படுத்தி விடாமல் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும், 'கபீர் சொல்கிறான்' என்பதில் தான் எத்தனை எத்தனை சுவையான மாற்றங்கள்?! சில நேரம் அது நம் காதுகளில் ஆசானின் அறிவுரையாகக் கேட்கிறது. சில நேரம், ஆசை மிக்க காதலியின் கெஞ்சலாக. சில நேரம், சமூகப் பொறுப்பும் கோபமும் கலந்த தலைவனின் கட்டளையாக. இப்படி வாசகனைக் கவிதைக்குள் இழுத்து நனைய வைத்துப் பரவசப்படுத்துவதில் கபீர் திறமைசாலி. கடவுள் = உள் + கட. தனக்கு உள்ளெ கடந்து சென்று ஆன்மாவின் மூலத்தில் இறைத்தன்மையைக் கண்டறிவதே ஆன்மீகத்தின் உண்மைத் தத்துவம் என்பதில் கபீருக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. கவிஞர் சேவியர், ஒரு கவிதையில்,
'புனிதப் பயணம் என்பது
நாம் செல்வதல்ல,
நமக்குள் செல்வது'
என்று அழகாகக் குறிப்பிடுவார். கபீரும் இத்தகைய சிந்தனையைத் தன் பாடல்களில் அங்கங்கே தூவிச் செல்கிறான். ஒரு பாடலில்,