கடவுளை வணங்குகிறவர்கள் வழிபாட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், ஸ்தல விருட்சத்தை சுற்றினோம் என்று வந்துவிடக்கூடாது. ஏன் மரத்தைச் சுற்றுகிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலை வலம் வரும்போது எந்த தெய்வத்துக்கு எத்தனை முறை சுற்ற வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைப் போல் வீட்டில் என்ன என்ன மரங்களை எங்கே வளர்க்க வேண்டும் என்று ஐதீகம் இருக்கிறது. இப்படி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.