அக்யூட் ரீனல் ஃபெய்லியர் ஆன கணவன், அவனை மிக மிக நேசிக்கும் மனைவி, அவனுக்கு பணமாகவோ, மாற்று சிறுநீரகம் கொடுக்கவோ தயங்கும் உறவினர் என்று யதார்த்தத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. முடிவில் அவன் இறந்துவிடுகிறான். இக்கதை என் தூரத்து உறவில் ஒரு அண்ணனுக்கு ஏற்பட்டதைப் போல இருந்ததால் பலமுறை படித்துக் கலங்கி இருக்கிறேன். ஹ்ம்ம். உறவுகளே காகிதச்சங்கிலியால் பின்னப்பட்டவை என்னும்போது அங்கே எதற்கும் மதிப்பில்லாமல் போகிறது.
தீவுகள் கரையேறுகின்றன. இக்கதை ஒரு மனநிலை பாதித்த பெண் குழந்தை அசந்தர்ப்பமாக கர்ப்பமாகி தன்னைத்தானே மாய்த்துகொண்டதாக முடியும் கதை. பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் கந்தைத் துணி உடுத்தி உடல் பிரக்ஞையற்ற , மனநிலை பாதிக்கப்பட்டோரிடம் கூட காமம் கொள்ளும் மிருக ஜென்மங்களை எண்ணி கோபம் கொள்ள வைத்த கதை.