கணேஷ்-வசந்த்; ஒரு பிணம்; கணேஷுடன் வேலை செய்ய விரும்பும் ஒரு சட்டக் கல்லூரி மாணவி நிருபமா என்று கதை ஆரம்பிக்கிறது. கணேஷ்-வசந்த் அந்தப் பிணத்தை புறம் தள்ளி கோர்ட், கேஸ், வாய்தா என்று போக விரும்பினாலும் நிருபமாவின் பிடிவாதத்தால் இந்தப் பிணத்தைப் பற்றி விசாரிக்கிறார்கள். அவள் ஒரு லோ கிளாஸ் விபசாரி என்று தெரிகிறது. அவள் வீட்டில் பறவைகளைப் பற்றி ஒரு புத்தகத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் சொந்தக்காரனைப் பிடிக்கிறார்கள். அவன் பெரிய பணக்காரன். வாழ்க்கையில் எதையும் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன். அவன்தான் கொலை செய்தவன் என்று சந்தேகித்தாலும் எந்த ஆதாரமும் இல்லை. என்ன செய்யப் போகிறார்கள்? “எதையும் ஒரு முறை” செய்து பார்ப்பான் என்று கணேஷ் தன் டீமை சமாதானப்படுத்துவதோடு கதை முடிகிறது.