சுஜாதாவின் எழுத்துகள் அவற்றின் அபூர்வமான கதைக் களன்களுக்காகவும் வாசகனை ஒரு மாயச்சூழலுக்குள் எழுத்துச் செல்லும் வசீகரமான நடைக்காகவும் காலத்தைத் தாண்டியும் தொடர்ந்து புதிய வாசகர்களை உருவாக்கிய வண்ணம் இருக்கிறது.இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சுஜாதாவின் ஏழு குறுநாவல்கள் வெவ்வெறு தளங்களில் சஞ்சரிப்பவை. வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களையும் மனித மனதின் விசித்திரங்களையும் மிக நுட்பமாகத் தொட்டுச் செல்பவை.