பகவத் கீதை விளக்கம், பகவத் கீதை சாரம், பகவத் கீதை உரை என்றெல்லாம்
எத்துணையோ நூல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் எத்துணை வந்தாலும் அத்துணையும்
நமக்குத் தேவைதான். அள்ளஅள்ளக் குறையாத அக்ஷய பாத்திரமான கீதையினின்று
நாங்கள் கொஞ்சம் அள்ளி உங்களுக்கு ஊட்ட முனைந்திருக்கிறோம். கீதையின் சாரம்
எளிய, இனிய நடையில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளதால், அனைவருக்கும்
பிடிக்கும் என்றே எண்ணுகிறோம். ஆசிரியர் சுவாமி ஆத்மானந்தா அவர்களைப்
பாராட்டியே தீரவேண்டும். அவரது பணி மேலும் தொடர்வதாகுக.