இந்த நவீன கம்ப்யூட்டர் யுகத்திலும் கூட, பட்டி தொட்டிகளில் பாட்டிகள், தங்கள் பேரக்குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் சொல்லும் வழக்கம் மாறாமல் உள்ளத். பிற்காலத்தில் பல துறைகளில் ஜொலிக்கப் போகும் பால பருவத்தினரின் பிஞ்சு உள்ளங்களைப் பட்டை தீட்டும் வல்லமை சிறுவர் இலக்கியத்திற்கு உண்டு. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கு நீதிபோதனைக் கதைகள் மிகவும் முக்கியம்.