இவர்
பல மருத்துவ முறைகளை கற்றிருந்தாலும், மலர் மருத்துவத்தில் அதிகம்
நாட்டம் கொண்டதால், பலவிதமான மன உடல் ரீதியான பாதிப்புடன் (Psychosomatic
Problems), வருபவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க உதவுகிறார். மேலும்,
ஆர்வம்முள்ளவர்களுக்கு இம்மலர் மருத்துவத்தை கற்றுகொடுப்பதுடன், பல
நிறுவனங்களில் மலர் மருத்துவத்தைப் பற்றி இவர் உரையாற்றியுள்ளார்.
பிரபலமானதோர் மருத்துவ ஆராய்ச்சி கூடத்தின் Ethics Committee அங்கத்தினராக
ஆறு வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
Dr.A.V.G. Reddy அவர்களின் இயற்கை மருத்துவத்தைப் பற்றிய தமிழ் நூலை ஹிந்தியில் மொழி பெயர்த்த பெருமை இவருக்கு உண்டு.
இம்மருத்துவ முறையை கையாள்வதன் மூலம், வரும் வருவாயை புற்று நோய்
நிறுவனம், முதியோர் இல்லம் மற்றும் ) ஆதரவற்றோருக்கு கொடுப்பதில் பெரும்
மகிழ்ச்சி அடையும் இவருக்கு அகவை அறுபத்தெட்டு (68)-ஐ கடந்தவர். |
இம்மலர் மருத்துவ நூல், தினசரி வாழ்க்கையில் சிறிதும் , பெரிதுமாக நாம்
சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு, சிறந்த தீர்வாக அமையும் என்பதில்
ஐயமில்லை.