ஆங்கில மருத்துவத்தில் புகழ் பெற்ற டாக்டர் பாட்ச் எம்.பி.பி. எஸ்.எம்.ஆர்.சி.எச்.எல்.ஆர்.சி.பி. அவர்களால் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எளிய சிறந்த முறையே மலர் மருத்துவ முறையாகும். 1930-இல் இருந்து ஆறு வருடங்கள் அடர்ந்த காடுகளில் ஆராய்ந்து இம்முறையை இவர் கண்டுபிடித்தார். மனிதனின் எண்ணங்களுக்கும், சுபாவத்துக்கும் உடலில் உள்ள சுரப்பிகளின் இயக்கமே தொடர்பு உடையதாக இருக்கின்றது. இச்சுரப்பிகளின் இயக்கப்படியே மனிதனின் நடத்தைகளும் அமைகின்றன. மனிதனின் வாய்வழி வார்த்தைகளே அவரின் சுபாவத்தை நிர்ணயிக்க உதவும் அளவுகோல் ஆகும்.
எதிர்மறையான எண்ணங்களை மலர் மருந்துகள் மூலம் சரிப்படுத்தினால் அவரின் நோய்கள் உடலை விட்டு நீங்கும். இதுவே இச்சிகிச்சை முறையின் சிறப்பு ஆகும்.