முழுமுதற் தெய்வம் என்று அனைவராலும் போற்றப் படுபவர் விநாயகப்பெருமான். விநாயகன் என்ற சொல்லுக்கு வேறு ஒரு தலைவன் இல்லாதவன் என்பது பொருள். வேறு ஒரு தலைவன் இல்லாதவன் என்றால் சர்வ சுதந்திரமாக எதையும் கொடுக்கக்கூடியவன். அவன் முன்வந்து ஒரு காரியத்தில் நின்றால் வெற்றியே விளையும். அதனைத் தடுத்து நிறுத்தக் கூடியவர்கள் எவரும் இல்லை என்பது இதன் உட்பொருளாகும்.