எதிர்கால பாரத தேசத்தின் சிற்பிகளாக திகழப்போகிறவர்கள் மாணவ மாணவியர்தான். அவர்களை உருவாக்குகிற மாபெரும்
பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு. அஸ்திவாரம் பலமாக இருந்தால் தான் எழுப்பும் கட்டடம் உறுதியாக இருக்க முடியும். அதேபோல இளம் பருவத்தில் மாணவர்களின் உள்ளத்திலே எதை விதைக்கிறோமோ,அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் வடிவம் பெறுவார்கள். நம்முடைய முன்னோர்களைப் பற்றிய செய்திகளை மாணவ சமுதாயம் தெரிந்து கொண்டால் படிப்பில் மட்டுமின்றி மற்ற எல்லாத் துறைகளிலும் அவர்கள் நிகரற்று விளங்குவார்கள். நம்முடைய முன்னோர்களின் பெருமைகளை மறந்ததே நம்முடைய தாழ்வுகளுக்கெல்லாம் மூலகாரணமாக உள்ளது. அதனை மாற்றுகிற விதத்தில் 'மாணவர்களுக்கான அறிவுக் கதைகள்' என்னும் தலைப்பில் இந்நூல் உதயமாகியுள்ளது. பல கற்பனை கதைகளுடன் இராமாயண, மகாபாரத கதைகளும் மாணவ சமுதாயத்திற்கு பயன்படுகின்றவிதத்தில் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
- பரமஹம்ச ஸ்ரீமத் பரத்வாஜ் சுவாமிகள்.