காளியை அனைவரும் வணங்கலாம். ஆனால் மன தைரியம் வேண்டும். பூரண பக்தியோடு, எவனொருவன் ஸ்ரீ மகாகாளியை வணங்குகிறானோ அவனுக்கு சத்ரு பயம், மரண பயம் ஆகியவை இருக்காது.
மேலும் நிலையான இன்பமாகிய வீடு பேறு என்னும் மோட்சத்தை அருள்வதில் முதன்மையானவள் அன்னை மகாகாளி. தசமகா வித்யையால் முதலிடம் பெறுவது அன்னை மகாகாளியே.
அன்பர்கள் இச்சிறுநூலைப் படித்து, அன்னை மகாகாளியை வணங்கி, அவளின் பரிபூரண அருளையும், அன்பையும் பெற்று, பிறவா நிலையடைய முயலுமாறு கூறிக் கொண்டு, அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து வாழ வேண்டுமாய் எம்பெருமானார் புவனேஸ்வரி சுவாமிகளின் திருவடியைச் சிந்தித்துக் கொள்கிறேன்.
ஸ்வாமிகள் திருவடியில்
ஸ்வாமி பரத்வாஜ்