தமிழ்
இலக்கிய வளத்தில் இடைக்காலத்தின் பங்காகப் பல சிறப்புகளைக் கொண்ட
இலக்கியங்கள் இருந்துள்ளன. அவற்றுள் முக்கியமானதும் தலை சிறந்ததும் இலக்கிய
நயங் கொண்டதும் ஆன 'முத்தொள்ளாயிரம்' செம்மொழி இலக்கியமாகப்
போற்றப்படுவது. கடவுள் வாழ்த்து உட்பட 109 பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு
பாடலும் ஒரு வரலாற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பாடலையும் ஒரு
சிறுகதை போல விளக்கி அனைவரும் புரிந்து போற்றும் வகையில் அமைந்துள்ளது.
முத்தொள்ளாயிரம் என்பது மூவேந்தர்களைப் பற்றிய பாடல்களை உடையது. கடவுள்
வாழ்த்து ஆதிரையானைப் போற்றுகிறது. கற்பனை வளமும் காவிய நலமும்
சொற்சுருக்கமும் சுவைப் பெருக்கமும் உடைய பாடல்களாக இயற்கைச் செழுமையுடன்
திகழ்கின்றன் பாடல்கள்.