கருணையே வடிவானவர்கள் சித்தர்கள். எல்லையில்லா பரம்பொருளாகிய இறைவனின் ஒரு அணுத் துகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருப்பதால் சித்தர் பெருமக்கள் இறைவனின் பெருங்கருணையை நாமும் அனுபவித்துப் பயன் பெறும் வகையில் பல வழிபாட்டு முறைகளை அமைத்துத் தந்துள்ளனர். இவ்வகையில் பன்னிரு திருமுறைப் பாடல்களை நாம் எப்படி ஓதிப் பயன்பெற வேண்டும் என்ற முறையையும் நமக்காக அவர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.