இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் யார்? முதல் பெண் மருத்துவர் யார் என்று கேட்டால் உடனே கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லும் நமக்கு இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார் என்று கேட்டால் தெரியாது. ஆனால் டாக்டர் ராதா கிருஷ்ணனின் நினைவாகக் கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினம் கட்டாயம் இவரை வரலாற்றுப் பக்கங்களில் மறைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பெருமைக்கு உரிய பெண் ஆசிரியர் தான் சாவித்ரிபாய் பூலே. இவர் செய்த சமூகப் புரட்சிகளையெல்லாம் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். அவரைப் பற்றி இந்த ஆசிரியர் தினத்திலாவது நினைவு கூர்வோம்.